எம்ஜிஆர் நினைவு தினம்: அமமுகவினர் அனுசரிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பெங்களூரு சீராமபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அமமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலருமான வா.புகழேந்தி மலர் தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சியினர் உறுதிமொழியை ஏற்றனர்.
மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், துணைச் செயலர்கள் ராஜி,பரமேசுவரி,பரமேசுவரன், மாவட்டச் செயலர் குமார், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் வெங்கடேஷ், தொகுதிச் செயலர்கள் சுந்தரமூர்த்தி, பரசுராம், பாண்டு, செல்வம் மற்றும் ரவி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
இதேபோல், பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு அஞ்சலி நடைபெற்றது.
மேலும், தி.க. நிறுவனர் பெரியார் நினைவுத் தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.