"ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்'
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று சிறிய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ். புட்டராஜூ தெரிவித்தார்.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று சிறிய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ். புட்டராஜூ தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், மேல்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியது:
பெண்களின் சுகாதாரத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களை நகரங்களில் வசிக்கும் பெண்கள் மட்டுமின்றி, கிராமங்களில் வசிக்கும் பெண்களும் பெற்று பயனடைய வேண்டும். பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசுகள் மட்டுமின்றி, தனியார்களும் கைகோக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு செய்யும் சேவை, கடவுளுக்கு செய்யும் சேவையாகும். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் கைக்கோக்க வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.