முகப்பு
சென்னை

பெண்ணிடம் நகை பறிப்பு

சென்னை கோயம்பேடு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை 2018, 4:50 am IST
பகிர்:

சென்னை கோயம்பேடு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
அரும்பாக்கம் வெங்கடகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ச.இந்திரா (48). ஆவடிக்குச் சென்றுவிட்டு மொபெட்டில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மொபெட்டின் பின் இருக்கையில் மாமியார் பாலம்மாளும் (70), மொபெட்டின் முன் பகுதியில் மகன் நித்தியும் இருந்தனர். இவர்களின் வாகனம் கோயம்பேடு பாலத்தில் செல்லும் போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இந்திரா கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். 
இச்சம்பவத்தில் மொபெட்டில் பின் இருக்கையில் இருந்த பாலம்மாள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments