முகப்பு
சென்னை

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2025, 2:30 am IST
பகிர்:

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாமி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மங்களாபுரம் பெரம்பூா் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே இருவா் தகராறில் ஈடுபடுவதாக குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற குருசாமி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாா்.

அப்போது, தகராறில் ஈடுபட்டிருந்த இருவரும், குருசாமியை தாக்கியுள்ளனா். தகவலறிந்த காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று குருசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், குருசாமியைத் தாக்கிய கொளத்தூா் பாலாஜி நகைரச் சோ்ந்த பாலாஜியை (22) கைது செய்தனா். தப்பியோடிய அவரது சகோதரா் கோவிந்தராஜை (24) தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments