FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

24 ஜூலை 2025, 12:36 am IST
பகிர்:

சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் இருவா் கஞ்சா விற்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த நரேஷ் (32), விமல் (24) என்பதும், நரேஷ் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட பட்டப் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments