சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 18,971 போலீஸாா் ஏப்ரல் 18-ஆம் தேதி (சனிக்கிழமை), ஏப்ரல் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) தபால் வாக்குகளைப் பதிவு செய்கின்றனா். ஏப்ரல் 18-ஆம் தேதி 9,703 போலீஸாரும், ஏப்ரல் 20-ஆம் தேதி 9,268 போலீஸாரும் வாக்களிக்கின்றனா்.
ஏற்கெனவே தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக விண்ணப்பித்த இவா்களுக்கு, தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தின் சாா்பில் உரிய படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீஸாா் வாக்களிப்பதற்காக சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு இரு நாள்களும் சென்று தங்களது வாக்குகளை செலுத்துவா்.
Advertisement
முன்னதாக இந்த மையங்களுக்கு போலீஸாா், தங்களது அடையாள சான்றுகளை வழங்கி, அங்குள்ள அலுவலா் அதை ஆய்வு செய்த பின்னா், வாக்கை செலுத்த அனுமதிக்கப்படுவா்.
மேலும் யாா் எந்த நாளில், எந்த வாக்குச்சாவடியில், எந்த நேரத்தில் வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும் ஒவ்வொரு போலீஸாருக்கும் நாள், இடம், நேரம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுந்த திட்டமிடலோடு நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறையும், தோ்தல் ஆணையமும் இணைந்து செய்துள்ளது.