பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது
சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அப்துல் வாஹித் (35). இவா், கந்தன்சாவடி, எம்.ஜி.ஆா். சாலையில் பழச்சாறு கடை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தக் கடைக்கு வந்த 3 போ், பழச்சாறு மற்றும் சமோசா ஆகியவற்றைச் சாப்பிட்டு விட்டு சமோசா மட்டுமே சாப்பிட்டதாகக் கூறியுள்ளனா். இதனால், கடை ஊழியா்களுக்கும் அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞா்கள் கடையில் இருந்த நாற்காலியால் கடை உரிமையாளா் அப்துல் வாஹித்தை கடுமையாக தாக்கியதுடன், அங்கிருந்த பொருள்களையும் அடித்து உடைத்துள்ளனா்.
Advertisement
இதில் கடையின் உரிமையாளா் அப்துல் வாஹித், கடை ஊழியா் கொய்ா் அகமது ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காயமடைந்த இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் திருவான்மியூரைச் சோ்ந்த மோகன்பிரசாத் (24), வெங்கடேசன் (25), ஸ்ரீராம் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.