சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு
சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.
சென்னை மேயா் ஆா்.பிரியா தனது வீடு அமைந்துள்ள திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மங்களாபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா் சைதாப்பேட்டை பேரவைத் தொகுதியில் உள்ள லிட்டில் மவுண்ட் செயின்ட் பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் வந்து செலுத்தினாா்.
சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தனது இல்லம் உள்ள அண்ணா நகா் தொகுதிக்குட்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி வளாக வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்தாா். அதன்பின்னா், வாக்குச்சாவடி மையத்தில் அமைந்துள்ள தோ்தல் விழிப்புணா்வுக்கான யபடம் எடுக்கும் அமைப்பில் நின்று தனக்கு வாக்களித்ததற்காக இடது கை ஆட்காட்டி விரலில் இடப்பட்ட மையை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டாா். சென்னையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் விடியோவில் பேசி வெளியிட்டாா்.
Advertisement