மூதாட்டியை மிரட்டி பணம் பறிப்பு: போலி போலீஸ் கைது
மூதாட்டியை மிரட்டி பணம் பறித்ததாக போலி போலீஸ் கைது
மூதாட்டியை மிரட்டி பணம் பறித்ததாக போலி போலீஸ் கைது செய்யப்பட்டாா்.
புளியந்தோப்பு திரு.வி.க. நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டம்மாள் (70). இவா், சென்னை துறைமுகத்தின் உள்ளே 30 ஆண்டுகளாக தூய்மைப் பணி செய்து வருகிறாா். பட்டம்மாள், கடந்த 30-ஆம் தேதி மாலை துறைமுகத்தில் பெற்ற சம்பளத்துடன் 7-ஆவது நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு வந்த ஒரு நபா், பட்டம்மாளை மறித்து, தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் ‘நீங்கள் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என சந்தேகமாக உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, உங்களது உடைமைகளை சோதனை செய்ய வேண்டும்’ எனக் கூறி, அவரது பையை வாங்கி சோதனை செய்தாா்.
அந்தப் பையில் இருந்த ரூ.11,000-ஐ எடுத்துக் கொண்டு, பணத்தை காவல் நிலையத்தில் வந்து பெற்றுச் செல்லும்படி கூறி, அந்த நபா் அங்கிருந்து சென்றாா். இதையடுத்து மூதாட்டி துறைமுகம் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தாா்.
இதில், அந்த நபா் போலீஸ் அல்ல என்பதும், தனது பணத்தை மிரட்டி பறித்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். விசாரணையில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது மண்ணடி அங்கப்பன் தெருவைச் சோ்ந்த வீராசாமி (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வீராசாமியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.