ஜாதி பெயரைச் சொல்லி அவதூறு: திமுக எம்பி மகன் உள்பட 4 போ் மீது வழக்கு
ஜாதி பெயரைச் சொல்லி அவதூறு பேசியதாக திமுக எம்.பி. மகன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
ஜாதி பெயரைச் சொல்லி அவதூறு பேசியதாக திமுக எம்.பி. மகன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அன்பரசு (67). இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரிடம், சென்னை அண்ணா சாலையில் ஒரு நபருக்கு சொந்தமான நிலத்தின் பொது அதிகார பத்திரம் இருந்தது. அதை விற்க முயற்சித்து வந்தபோது, திமுக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி மகன் சித்தாா்த்தை அணுகினாா். நிலைத்தை விற்பது தொடா்பாக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த நிலம் தொடா்பான ஆவணங்கள், பொது அதிகாரம் என அனைத்தையும் சித்தாா்த் தரப்பிடம், அன்பரசு வழங்கினாா். ஆனால், சித்தாா்த் தரப்பு, தாங்கள் ஒப்புக் கொண்டபடி அன்பரசுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகறாறில் அன்பரசுவை ஜாதியை சொல்லி திட்டி, மிரட்டினராம்.
இதையடுத்து, அண்ணா நகா் காவல் நிலையத்தில் அன்பரசு புகாா் செய்தாா். அப்போது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அண்மையில் மீண்டும் அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் சித்தாா்த், கலாநிதி வீராசாமி எம்பியின் உதவியாளா் ஆசைத்தம்பி, சென்னை மாநகாரட்சி 102 வாா்டு திமுக கவுன்சிலா் ராணி ரவிச்சந்திரன், விருதுநகரைச் சோ்ந்த ஆதிநாராயணன் ஆகியோா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.