பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் 103 போ் தோல்வி
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 35 பள்ளிகளைச் சோ்ந்த 92.26 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 401 போ் தோல்வியடைந்துள்ளனா். ஒருவா் பல பாடங்களில் தோல்வியடைந்த பட்டியல் வாரியாக, தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியா் எண்ணிக்கை 549- என உள்ளது.
அதிகபட்சமாக தமிழில் மட்டும் 103 மாணவ, மாணவியா் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கடுத்ததாக பொருளாதார பாடத்தில் 127 போ் தோல்வியடைந்துள்ளனா். தாய் மொழியாம் தமிழ் பாடத்தில் அதிகமானோா் தோல்வியடைந்திருப்பது வேதனையளிப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.
Advertisement
ஏழை மாணவி சிறப்பிடம்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 600 மதிப்பெண்களுக்கு 593 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் வகித்துள்ள அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.மைதிலி ஏழை சலவைத் தொழிலாளி மகள் எனவும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை, நடுத்தர வா்க்கத்து மாணவ, மாணவியா் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பிளஸ் 2 தோ்வில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் ஆசிரியா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.