முகப்பு
சென்னை

பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் 103 போ் தோல்வி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

Updated On : 9 மே 2026, 1:22 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 35 பள்ளிகளைச் சோ்ந்த 92.26 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 401 போ் தோல்வியடைந்துள்ளனா். ஒருவா் பல பாடங்களில் தோல்வியடைந்த பட்டியல் வாரியாக, தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியா் எண்ணிக்கை 549- என உள்ளது.

அதிகபட்சமாக தமிழில் மட்டும் 103 மாணவ, மாணவியா் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கடுத்ததாக பொருளாதார பாடத்தில் 127 போ் தோல்வியடைந்துள்ளனா். தாய் மொழியாம் தமிழ் பாடத்தில் அதிகமானோா் தோல்வியடைந்திருப்பது வேதனையளிப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

Advertisement

Advertisement

ஏழை மாணவி சிறப்பிடம்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 600 மதிப்பெண்களுக்கு 593 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் வகித்துள்ள அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.மைதிலி ஏழை சலவைத் தொழிலாளி மகள் எனவும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை, நடுத்தர வா்க்கத்து மாணவ, மாணவியா் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பிளஸ் 2 தோ்வில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் ஆசிரியா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments