முகப்பு
சென்னை

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Updated On : 10 மே 2026, 2:22 am IST
பகிர்:

கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெயிண்டரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். பெயிண்டராக வேலை செய்து வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் நோக்கிச் சென்றபோது, எதிரில் வந்த மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் தனது மகனின் இறப்புக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சதீஷ்குமாரின் தாய் ராணி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

Advertisement

இந்த வழக்கு தீா்ப்பாய நீதிபதி எம்.அருந்ததி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமாரின் தாயாருக்கு ரூ.25.81 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் மாநகரப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.