சேவாலயாவில் மகாவீர் ஜயந்தி விழா
திருவள்ளூர் அருகே, கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மகாவீர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவள்ளூர் அருகே, கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மகாவீர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சேவாலயா அறக்கட்டளையின் நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். இதில், தொழிலதிபர் ஸ்ரீபிரதீப் குமார் ஜெயின் கலந்து கொண்டு பேசுகையில், மகாவீர் ஜயந்தி விழா 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மகாவீரரின் கோட்பாடுகளான சத்தியம், அகிம்சை, திருடாமை போன்ற கொள்கைகள் மற்றும் நல்ல கருத்துகள் ஒவ்வொரு மாணவ, மாணவியரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி.எம்.டி.ஜெம் அறக்கட்டளையின் தலைவர் பரத்குமார் ஜெயின், நிர்வாக இயக்குநர் ஸ்ரீராஜேந்திர பிரசாத் ஜெயின் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையர் ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஜெயின் சங்கத்தின் செயலாளர் விமல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் பாரதியார் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.