திருத்தணியில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருத்தணியிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருத்தணியிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
திருத்தணி பகுதியிலிருந்து தோட்ட நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இருப்பினும் திருத்தணி - பெங்களூர் இடையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்த இரு நகரங்களுக்கு இடையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, திருத்தணி - பெங்களூர் இடையிலான போக்குவரத்து சேவை திங்கள்
கிழமை தொடங்கியது. திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், போக்குவரத்து துறை திருவள்ளூர் மண்டலப் பொது மேலாளர் இளங்கோவன், திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன், சோளிங்கர் பணிமனை மேலாளர் ரமேஷ், காஞ்சி மண்டல அண்ணா தொழிற்சங்கத் தலைவர் வெங்கடபதி, இணைச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், ஆவின் முன்னாள் இயக்குநர் ஏ.பி.சந்திரன், நகர அவைத் தலைவர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஸ்டுடியோ அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.