தேசியத் திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்று தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்று தேர்வு எழுதியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கிராமங்களில் இருந்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டுக்கான இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 8,521 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இத்தேர்வுக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட 24 மையங்களில், மொத்தம் 7,580 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
இதில், 941 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ. 1,250 வழங்கப்பட உள்ளது. அதேபோல், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு ரூ. 2 ஆயிரமும், ஆராய்ச்சிப் படிப்புக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் இத்தேர்வில், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.