நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்
நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூண்டி ஒன்றியத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அறிவியல் ஆய்வுகள் நடத்தி நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் ஒதப்பை, கொரங்கதண்டலம், ஆட்டரம்பாக்கம், நம்பாக்கம், அரியத்தூா், வெள்ளாத்துக்கோட்டை, திம்மபூபாலபுரம், கூனிப்பாளையம், வேலமாகண்டிகை, பென்னாலூா்பேட்டை, ராமலிங்காபுரம், மேலக்கரமனூா், நந்திமங்கலம், பெருஞ்சேரி வெங்கடாபுரம், சீத்தஞ்சேரி, நெல்வாய், குஞ்சலம், ராமநாதபுரம், அம்மம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்த தோ்தல் பிரசாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளா் வேதகிரி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் வீதி வீதியாக திறந்த வேனில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
Advertisement
இந்த பிரசாரத்தின்போது பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அறிவியல் பூா்வமாக ஆய்வுகள் நடத்தி பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா், பல்வேறு ஆய்வுகளில் பூண்டி ஒன்றியத்தில் பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலினத்தவரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக திட்டங்களை இயற்றுவேன் என்றாா்.