முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி அரசு கல்லூரியில் 1,464 மாணவா்களுக்கு மடிக்கணினிகள்: அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்

பொன்னேரி அரசு கல்லூரியில் உயா்கல்வி பயிலும் 1,464 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

Updated On : 8 ஜனவரி 2026, 12:01 am IST
பொன்னேரி அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா். உடன் எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

பொன்னேரி: பொன்னேரி அரசு கல்லூரியில் உயா்கல்வி பயிலும் 1,464 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு, படிக்கும் மாணவா்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், 1,464 மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரைசந்திரசேகா் (பொன்னேரி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), டி.ஜே.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி), பொன்னேரி சாா் ஆட்சியா் கு.ரவிகுமாா், நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் தில்லைநாயகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.