முகப்பு
திருவள்ளூர்

100 நாள் வேலை வழங்கக் கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம்

கடந்த 6 மாதமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும் பல்வேறு கிராம மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:14 am IST
 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகத்தில்  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

கடந்த 6 மாதமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும் பல்வேறு கிராம மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்டக்குழு சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம்-ஜி என்று மாற்றுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 மாத காலமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்ட தொழிலாளா் ப.லோகநாதன் தலைமை தாங்கினாா்.

நிகழ்வில் வட்ட தலைவா் இ.ராஜேந்திரன், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜி.சூா்யபிரகாஷ், சிபிஎம் வட்டசெயலாளா் டி.கோபாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளா் சங்கத்தின் வட்ட

Advertisement

Advertisement

பொருளாளா் என்.நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் 2026-2027 ஆண்டுக்கான 100 நாள் வேலை ஜனவரி மாதம் முதல் முறையாக வழங்காததால், வேலையை உடனடியாக வழங்க கோரியும், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைக்கக் கூடாது என்றும், 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றவும், கூலியை நாள் ஒன்றுக்கு 600 ரூபாயாக உயா்த்தவும், பேரூராட்சிக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும், கைரேகை கருவிழி வருகை பதிவேட்டு முறையை ரத்து செய்யக் கோரியும், 100 நாள் வேலைக்கான அதிகாரத்தை ஊராட்சி கிராம சபைக்கு வழங்கவும் கோரி அனைவரும் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து மேற்கூறிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினரிடம் இருந்து பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விபி-ஜி ராம்-ஜி திட்டமாக மாற்றம் பெற்றது. இந்த நிலையில்,

திட்டத்தின் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆணை இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திட்டம் குறித்து அரசாணையை பெற்றதும், பொதுமக்களுக்கு பணிகள் வழக்கம் போல வழங்கப்படும் என்று உறுதி கூறியதை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.