முகப்பு
திருவண்ணாமலை

விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை

வேட்டவலம் நகர தேமுதிக சார்பில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 10:02 am IST
பகிர்:

வேட்டவலம் நகர தேமுதிக சார்பில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் உள்ள தூய நெஞ்ச தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.
நகர துணைச் செயலர்கள் பலராமன், சிவக்குமார், வட்டச் செயலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய பங்குத்தந்தை எஸ்.கிளமெண்ட் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். இதில், ஒன்றியப் பிரதிநிதி ஏழுமலை, கேப்டன் மன்றச் செயலர் வெங்கடேசன், ராஜேஷ், சரவணன், ஆரோக்கியதாஸ், மணிகண்டன், சிலுவை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments