கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடம், அரசு மருத்துவமனை வளாகம், நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சனிக்கிழமை அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 11 பைக்குகள், 4 மொபெட்டுகள் கடந்த சில நாள்களாக கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 15 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.