வேடநத்தத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் மக்கள் திட்ட இயக்கம் சார்பில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் மக்கள் திட்ட இயக்கம் சார்பில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ரோமா, கால்நடை மருத்துவ அலுவலர் ஆனந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்துவதன் நோக்கம், பல்வேறு துறைகள் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப்பகுதி வழிநடத்துநர் முனியம்மாள், இதர சார்புத்துறை அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.