வேளாண் மாணவிக்கு கோவை பல்கலை.யில் இடம் வழங்கப் பரிந்துரை
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படிக்க இடம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படிக்க இடம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி பரிந்துரை செய்தார்.
தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் தங்கபாண்டியன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம். இந்தப் பிரச்னை குறித்து 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவியை திருச்சியில் உள்ள வேளாண் கல்லூரியில் சேருமாறு கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் திருச்சி கல்லூரியில் சேராததால், மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, மாணவியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் ஏதுவாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்
3-ஆம் ஆண்டு பி.எஸ்சி. வேளாண்மை படிக்க மாணவிக்கு இடம் வழங்குமாறு பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பான பரிந்துரைக் கடிதம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.