பெருமாள் கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு
போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல, புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை யொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்ரீராமர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மேலும், ஸ்ரீபஜகோவிந்தம் அறக்கட்டளை சார்பில், சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்வி தலைமையில், ஒழுக்கமே உயர்வு என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து, வட்டாட்சியர் தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் தயாளன் ஆகியோர் சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்விக்கு சால்வை அணிவித்து கெüரவித்தனர். ராகவா கேபிள் டிவி நிர்வாகி பரணிராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் உடனிருந்தனர்.