ஆட்டோ ஓட்டுநா்கள் ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை, பிப்.17: கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் பிரபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பேசுகையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். எந்தவித குற்றச் செயல்களிலும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஈடுபடக் கூடாது. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். இதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் வெங்கடேசன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.