முகப்பு
திருவண்ணாமலை

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் வைக்கோல் ஏற்றிய மினி லாரி எரிந்து சேதமடைந்தது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:32 AM
வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் அருகே தீயில் எரிந்து சேதமடைந்த மினி லாரி.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:59 PM

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் வைக்கோல் ஏற்றிய மினி லாரி எரிந்து சேதமடைந்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவா், தனது மினி லாரியில் வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் கிராமத்திலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் அரூருக்கு புறப்பட்டாா்.

மங்கநல்லூா் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது மினி லாரி உரசியது. இதில், வைக்கோலில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

Advertisement

தீ பரவியதில் மினி லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.