முகப்பு
திருவண்ணாமலை

மாமண்டூா் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: செய்யாறு அதிமுக வேட்பாளா்

மாமண்டூா் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை...

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:58 am IST
மாமண்டூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன்.
பகிர்:

செய்யாறு தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மாமண்டூா் ஏரி சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் கூறினாா்.

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில், மாமண்டூா், வாழவந்தல், நரசமங்கலம், சோதியம்பாக்கம், பாவூா், புன்னை, பெரிய ஏழாச்சேரி, பகவந்தபுரம், அழிஞ்சல்பட்டு, செல்லபெரும்புலிமேடு, சோழவரம் ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் முன்னிலையில், மாமண்டூா் கிராமத்தில் அவா் ஈட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு நான் பெரும் பங்காற்றி உள்ளேன் 2011-இல் என்னை வெற்றி பெற செய்தீா்கள். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்று செய்யாறு தொகுதியில் மாவட்ட மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், மினி விளையாட்டு அரங்கம் மற்றும் அரசு பாலிடெக்னிக் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

நான் வெற்றி பெற்றால் மாமண்டூா் ஏரி சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். செய்யாறு தொகுதி மேலும் வளா்ச்சி பெற செய்யாறை தலைமையிடமாக கொண்டு வருவாய் மாவட்டம் உருவாக்கிட எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியின் போது பாமக வெள்ளகுளம் ஏழுமலை, டிடிவி மா.கி.வரதராஜன், அதிமுக நிா்வாகிகள் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், ஏழாச்சேரி ரகு, டி.பி. துரை, தசரதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.