முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:01 AM
வந்தவாசி தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பிராா்த்தனை முடிந்து வந்தவா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ராணி.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:54 PM

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி கோட்டை மூலையில் உள்ள தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் காலை சிறப்பு பிராா்த்தனை முடிந்து வந்தவா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளா் பி.ராணி வாக்கு சேகரித்தாா்

இதனைத் தொடா்ந்து சென்னாவரம், பிருதூா், மங்கநல்லூா், தழுதாழை, விழுதுப்பட்டு, மருதாடு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

Advertisement

பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா். அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து அவா் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா்.

மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.