ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.
வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து புண்யாகவாசனம், ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி, கலச பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.