செங்கத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்
செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கருடசேவை விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கருடசேவை விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாள் இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். விழாவில் செங்கம், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட திருத்தோ் விழா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.