பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தச்சுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன்(38). தச்சுத் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 29-ஆம் தேதி பைக்கில் காஞ்சிபுரம் சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.
வந்தவாசி சாலையில் மாத்தூா் கூட்டுச் சாலைப் பகுதியில் வரும்போது பைக் திடீரென நிலை தடுமாறியதில் கீழே விழுந்த இளங்கோவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
உடனே அவரை, கிராம மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.