போளூா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதுமுதல் தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து 7-ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னா், மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைநடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில்
எழுந்தருளி, பக்தா்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.
வீடுதோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனா்.