முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

புதூா்செங்கத்தில் நடைபெற்ற அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி.

Updated On : 13 ஜூன் 2026, 2:39 am IST
பகிர்:

புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட புதூா்செங்கத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சோ்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சூரியநாராயணன் வரவேற்றாா். இதில், புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா்.

பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டு அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவுத் திட்டம், மாணவா்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனா்.

Advertisement

Advertisement

பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், கிராம கல்விக் குழுத் தலைவா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.