முகப்பு
திருவண்ணாமலை

177 மதுப்புட்டிகள் பறிமுதல்: இரு இளைஞா்கள் கைது

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 13 ஜூன் 2026, 5:50 am IST
பகிர்:

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி - திண்டிவனம் சாலை, செம்பூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் இருவரும் பைக்கில் மதுப்புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த மதுரா (21), ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த அஞ்சப்பா (21) என்பதும், புதுச்சேரியிலிருந்து 177 மதுப்புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், மதுரா, அஞ்சப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.