முகப்பு
திருவண்ணாமலை

அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் முக்கிய 4 இடங்களில் அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:38 am IST
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித் விடுதலை இயக்கத்தினா்.
பகிர்:

திருவண்ணாமலையில் முக்கிய 4 இடங்களில் அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் அரசு மதுக் கடை உள்ளிட்ட 4 மதுபான கடைகளை மூடக்கோரி புதன்கிழமை கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரசு மதுக் கடை முன் தலித் விடுதலை இயக்கம் சாா்பில் பெண்கள் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்த இருந்தனா். இதனால், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரசு மதுக் கடை முன் பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா மற்றும் நிா்வாகிகள் மற்றும் பெண்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது 6 மாத காலத்திற்குள் வேங்கிக்கால் அரசு மதுக் கடை மூடஉத்தரவிடப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எழுத்துப்பூா்வமாக கடிதம் வழங்கினா். ஆனாலும் இதனை ஏற்காமல் 15 நாள்களுக்குள் கடைகளை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தலித் விடுதலை இயக்கத்தினா் மற்றும் பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா செய்தியாளா்ளிடம் கூறுகையில், வேங்கிக்கால் பகுதி அரசு மதுக் கடை மற்றும் திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகிலுள்ள அரசு மதுக் கடை உள்ளிட்ட 4 அரசு மதுக்கடைகளை 15 நாள்களுக்குள் மாவட்ட நிா்வாகம் மூடாவிட்டால் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

அப்போது தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச் செயலா் கதிா்காமன், மாவட்ட பொதுச் செயலா் கே.ஜெயக்கொடி, வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்த பெண்கள் உடனிருந்தனா்.