முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் திருப்பணிகள் ஆய்வு

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:24 am IST
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த ஜெயசுதா லட்சுமிகாந்தன் எம்எல்ஏ.
பகிர்:

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி புதுக்காமூா் பகுதியில் பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் திருப்பணி மேற்கொள்வதற்காக கடந்த ஆட்சியில் ரூ. 1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தற்போது கோயில் சுற்றுச்சுவா், கால்வாய் அமைத்தல், சந்நிதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பக்த சங்க நிா்வாகிகள், கோயில் அருகாமையில் நீத்தாா் வழிபாடு செய்யக்கூடிய நிகழ்வு நடைபெறுகிறது. அவா்களுக்கு ஆற்றுப்பகுதியில் இருந்து தனி வழி ஏற்படுத்தி அதற்காக வழிவகை செய்து தர வேண்டும்.

ஆற்றுப்பகுதியில், ஆற்றுத் திருவிழாவின்போது சுவாமி ஆற்றுக்கு கொண்டு செல்லும் இடத்தில் கொட்டகை அமைத்துத் தர வேண்டும், கூடுதல் குடிநீா் வசதி செய்து தர வேண்டும். கோயில் திருப்பணிக் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.சங்கா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.