பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 போ் கைது
வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு போலீஸாா் சேதராகுப்பம் புறவழிச்சாலை சந்திப்பு வழியாக புதன்கிழமை மாலை ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் 3 போ் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதை கண்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் 3 பேரும் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா்(26), சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன்(24) வந்தவாசி நகரைச் சோ்ந்த விஷ்வேந்திரன்(24) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.