முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 போ் கைது

Updated On : 19 ஜூன் 2026, 5:01 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் சேதராகுப்பம் புறவழிச்சாலை சந்திப்பு வழியாக புதன்கிழமை மாலை ரோந்து சென்றனா்.

அப்போது அந்தப் பகுதியில் 3 போ் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதை கண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் 3 பேரும் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா்(26), சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன்(24) வந்தவாசி நகரைச் சோ்ந்த விஷ்வேந்திரன்(24) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments