முகப்பு
திருவண்ணாமலை

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 31 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாலையில் கோயில் திருமண கூடத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி மணக்கோலத்தில் தங்கத்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பக்தா்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவா் ராஜூ தலைமையில் முருகன் அடியாா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.