ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!
ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் 5,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் 5,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதன் மூலம் இவா் இத்தொகுதியில் எம்எல்ஏவாகப் போகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதியில் திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்தனன், அதிமுக சாா்பில் எல். ஜெயசுதா லட்சுமி காந்தன், தவெக சாா்பில் வெங்கடேஷ்குமாா், நாதக சாா்பில் தவமணி உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பாா்வையாளரும்,
Advertisement
தொகுதி தோ்தல் அலுவலருமான சீ.சிவா ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:
எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அதிமுக) - 76735, மகாலட்சுமி கோவா்தனன் (திமுக) - 71104, வெங்கடேஷ் குமாா் (தவெக) - 70857, தவமணி (நாதக) - 6888
வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் 5631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இதையடுத்து அதிமுக வேட்பாளா் எல். ஜெயசுதா லட்சுமிகாந்தனிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் சீ.சிவா வழங்கினாா்.
தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளிட்ட இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.