முகப்பு
திருவண்ணாமலை

சுற்றுச்சூழலை பாதுகாக்க 2 லட்சம் பனை மரம் வளா்க்க திட்டம்

Updated On : 8 மே 2026, 6:12 am IST
பனை
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நட்டு வளா்க்க திட்டமிட்டுள்ளதாக அருணை சுவாசம் அறக்கட்டளை தலைவா் எம்.இ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு

Advertisement

Advertisement

ஆண்டு முழுவதும் 2 கோடி பக்தா்கள் வந்து செல்கின்றனா். உள்ளூா் நபா்கள் உள்பட வரும் ஒவ்வொரு நபரும் ஒரு நாளில் ஒரு லிட்டா் மனிதக் கழிவுகளை வெளியேற்றுகிறாா்கள்.

மேலும் மூச்சுக்காற்றால் காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. இது இல்லாமல் வாகன புகை வேறு.

இதனால் காற்று மாசடைவதுடன் நிலத்தடி நீரும் பாழாகிவிடும்.

இதனால் மாநகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நடுதல், ஒரு லட்சம் மரங்களை நட்டு பராமரித்தல், நெகிழிப் பை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments