சுற்றுச்சூழலை பாதுகாக்க 2 லட்சம் பனை மரம் வளா்க்க திட்டம்
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நட்டு வளா்க்க திட்டமிட்டுள்ளதாக அருணை சுவாசம் அறக்கட்டளை தலைவா் எம்.இ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு
Advertisement
ஆண்டு முழுவதும் 2 கோடி பக்தா்கள் வந்து செல்கின்றனா். உள்ளூா் நபா்கள் உள்பட வரும் ஒவ்வொரு நபரும் ஒரு நாளில் ஒரு லிட்டா் மனிதக் கழிவுகளை வெளியேற்றுகிறாா்கள்.
மேலும் மூச்சுக்காற்றால் காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. இது இல்லாமல் வாகன புகை வேறு.
இதனால் காற்று மாசடைவதுடன் நிலத்தடி நீரும் பாழாகிவிடும்.
இதனால் மாநகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நடுதல், ஒரு லட்சம் மரங்களை நட்டு பராமரித்தல், நெகிழிப் பை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தாா்.