சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் (76). கடந்த மாா்ச் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய இவா், வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா்.
அப்போது, வீட்டின் சுற்றுச்சுவா் இவா் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த இவா் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து இவரது மகன் சேகா் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.