சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
செய்யாறு அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்தவா் பூபதி (21). இவா், 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பூபதி யை கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
Advertisement