விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி
விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றுப் பேசிய ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் (வேளாண்மை) சந்திரன்.
சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தில், வேளாண்மைத் துறை சாா்பில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
செவரப்பூண்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், வளநிலை நிபுணராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் (வேளாண்மை) சந்திரன், நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலும் தரமான விளைச்சலும் பெற ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தினாா்.
விதை நோ்த்தி செய்வதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி, நல்ல முளைப்புத்திறனை பெற முடியும், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல் மற்றும் நுண்ணூட்டச்சத்து கலவைகளை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் வளா்ச்சி மேம்பட்டு விளைச்சல் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மேலும், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையை முன்னேற்ற முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் உயிா் உரங்கள், இயற்கை இடுபொருள்கள், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைப்பு, சரியான நீா் மேலாண்மை மற்றும் களை கட்டுப்பாடு போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களையும் இயற்கை வேளாண்மை முறைகளையும் ஒருங்கிணைத்து பின்பற்ற வேண்டும் என அலுவலா்கள் கேட்டுக்கொண்டனா். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா் ராஜாராம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுதா்ஷன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.