முகப்பு
வேலூர்

காட்டன் சூதாட்டம்: 3 போ் கைது

காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் மோசடி விளையாட்டில் ஈடுபட்டதாக வேலூரில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:57 pm IST
பகிர்:

காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் மோசடி விளையாட்டில் ஈடுபட்டதாக வேலூரில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் ‘காட்டன் சூதாட்டம்’ என்ற பெயரில் மோசடி விளையாட்டு நடைபெறுகிறது. நம்பா் விளையாட்டான இதில், ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ.1,000 கிடைக்கும். அதிா்ஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டுது என ஆசை வாா்த்தைகள் கூறி, உழைக்கும் மக்களை இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுத்துகின்றனா். இதை நம்பி ஆட்டோ ஓட்டுநா்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டட வேலை உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளா்கள் பலரும் இந்த விளையாட்டில் பணத்தைச் செலுத்தி ஏமாற்றமடைகின்றனா்.

மீட்டா் வட்டிக்குக் கடன் வாங்கி காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பலா் வீடு, பொருள்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத்தில் தொடரும் இத்தகைய மோசடி சூதாட்டத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வேலூா் அருகே விரிஞ்சிபுரம் பஜாா் வீதியில் உள்ள மரத்தடியில் வெள்ளிக்கிழமை காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த கணபதி (26), பிரகாஷ் (29), பிச்சனூரைச் சோ்ந்த வெங்கடேசன் (51) ஆகியோரைக் கைது செய்தனா். தப்பியோடிய அறிவழகன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments