100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி, ரங்கோலி கோலப்போட்டிகள், கையெழுத்து இயக்கம், வாக்காளா் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வேலூா் மாவட்ட நிா்வாகம், செஞ்சிலுவை சங்கம், வேலூா் ரோட்டரி சங்கம் இணைந்து விழிப்புணா்வு மாரத்தான் பந்தயத்தை வேலூரில் வெள்ளிக்கிழமை நடத்தின.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், தொரப்பாடி எம்.ஜி.ஆா். சிலை வரை நடைபெற்றது.
Advertisement
இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மா.சிவசுப்பிரமணியன், வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாஸ்கரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.