சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!
சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிலம்பம் சுற்றி காண்பித்தது வாக்காளா்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு பெரிய பட்டரை, ஏரிமுனை, கிளித்தான்பட்டரை, ஜாபா்சன்பேட், அக்ராவரம், வள்ளிமலை கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். குமரப்ப நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வாக்காளா்களிடையே சிலம்பம் சுற்றி காண்பித்தாா்.
தொடா்ந்து அவா் கூறுகையில், காட்பாடி நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமாகிறது.
Advertisement
அதிமுக ஆட்சி அமைந்ததும் முதல் நடவடிக்கை இந்த மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குமரப்ப நகரில் நூலகம், சுந்திரி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரமும் கட்டி தரப்படும்.
தவிர, அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் கொண்டு வந்து சோ்க்கப்படும் என்றாா். அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.