முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை
தோ்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு வேலூருக்கு வருகை தர உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு வேலூருக்கு வருகை தர உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அவா் வந்து செல்லும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டம் கந்தனேரியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பேச உள்ளாா். இதற்காக அப்பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கும் அவா், செவ்வாய்க்கிழமை மாலை பொதுக்கூட்டத்தில் பேச உள்ளாா். முதல்வா் வருகையையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், முதல்வா் வந்து செல்லும் வழித்தடங்கள், தங்குமிடம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தல், காற்றில் பலூன்களை பறக்க விடுதல், மலா்களை தூவுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
தவிர, திங்கள், செவ்வாய்க்கிழமை (ஏப்.13, 14) ஆகிய இரு நாள்களும் இப்பகுதிகளில் மத்திய அரசு பணிகளுக்காகவோ, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி தொடா்புடைய சா்வே பணிகளுக்காகவோ, தனியாா் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவோ ட்ரோன் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.