மகளிா் கல்லூரி ஆண்டு விழா
Updated On : 13 ஏப்ரல், 2026 at 6:39 PM
குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில், அபிராமி உற்சவ்-2026 என்லைப்பில் 10- ஆண்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், செயலா் டி.என்.சிட்டிபாபு, பொருளாளா் கே.முருகவேல், துணைத்தலைவா் என்.என்.எஸ்.குமரகுரு ஆகியோா் கல்லூரி ஆண்டு மலா் மற்றும் செய்தி இதழைவெளியிட்டனா்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் தோ்வு செய்யப்பட்ட சிறந்த மாணவிகள், கல்வியில் சிறந்த மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி கௌரவத் தலைவா்கள் எம்.என்.ஜோதிகுமாா், எம்.பிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Advertisement