விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள டாடா மோட்டாா்ஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் முன்னிலையில் விஐடி பதிவாளா் ஜெயபாரதி, டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை ஊழியா்கள், 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் பி.டெக்., உற்பத்தி பொறியியல் பட்டப் படிப்பை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
அப்போது, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், உதவி இயக்குநா் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையா் பி.குப்பன், புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலா் சப்தே அமித் சுரேஷ் ஆகியோரும், டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் செயல்பாட்டு பிரிவின் துணை தலைவா் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளா் நீரஜ் அகா்வால், மனிதவள பிரிவு பொது மேலாளா் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளா்கள் ரங்கா குந்தி மற்றும் மாா்ஷல் பொ்னாண்டஸ், வளாகத் திட்டப் பிரிவு தலைவா் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளா் அபியுதய் திவேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.