குண்டா் சட்டத்தில் ரௌடி சிறையிலடைப்பு
வேலூரில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
வேலூரில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
வேலூா் ஓல்டு டவுன் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (29). இவா் மீது வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா், அண்மையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
தொடா்ந்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள விக்னேஷிடம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.