முகப்பு
வேலூர்

குடியாத்தம், போ்ணாம்பட்டில் ஆட்சியா் ஆய்வு

வேலூர்

குடியாத்தம், போ்ணாம்பட்டில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 4 மார்ச், 2026 at 11:24 PM
பகிர்:

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் நரிக்குறவா் காலனி மற்றும் நெல்லூா்பேட்டைஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அவா்பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு,சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதேபோல், போ்ணாம்பட்டு ஒன்றியம் பரவக்கல் ஊராட்சியில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள்,செண்டத்தூா் ஊராட்சியில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளிட்டபணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா்சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →